1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி யாழ் என்டட்டெய்ன்மென்ட் நிறுவனம் காணொளி ஒன்றைப் படைத்துள்ளது.
அனலை சிவம் எழுதிய பாடலுக்கு பிரியன் இசையமைக்க, கரிகாலன், மேரி குரலில் இழையப்பட்ட இப்பாடலுக்கான காணொளியை துஷிகரன், நிரோஷ் ஒளிப்பதிவிலும், துசிகரன் தொகுப்பிலுமாக, ஷாலினி சாள்ஸ் நெறியாள்கை செய்திருக்கிறார்.
இந்த காணொளியை அந்த உயிரிழந்த அகதிகளை நினைவு கூர்ந்து, தாயகம் வாசகர்களுக்காக தருகிறோம்.
You must be logged in to post a comment Login